No results found

    சபாஷ் சரியான போட்டி: ஷிமோகாவில் மோதும் முன்னாள் முதல் மந்திரிகளின் வாரிசுகள்


    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்மந்திரி பங்காரப்பாவின் மகளும், பிரபல நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி பா.ஜ.க. 195 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பிரதமர் மோடி வாரணாசியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், பா.ஜ.க. இன்று 72 பேர் கொண்ட 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மகன் ராகவேந்திரா போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் இரு முன்னாள் முதல் மந்திரிகளின் வாரிசுகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Previous Next

    نموذج الاتصال