No results found

    மக்களவை தேர்தலில் 97 கோடி வாக்காளர்கள் தகுதி- தேர்தல் ஆணையர்


    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவின் தேர்தலை உலகமே கவனித்து கொண்டிருக்கிறது. தேர்தலை நேர்மையாக நடத்துவோம்.

    மக்களவை தேர்தலை நடத்த குழு அளவில் தயாராக உள்ளோம். ஒவ்வொரு தேர்தலும், தேர்தல் ஆணையத்திற்கு ஒரு தேர்வு போன்று தான்.

    அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மக்கள் தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை செய்தோம்.

    அனைவரும் பங்கேற்கும் வகையில் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளோம். தேர்தலுக்கான பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவது என்பது மிகப் பெரிய சவால்.

    மக்களவை தேர்தலுக்கு 10.5 லட்சம் வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 1.82 கோடி முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுதிறனாளி வாக்காளர்கள் உள்ளனர். 20.5 கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர்.

    16 குடியரசு தலைவர், துணை தலைவர் தேர்தல்களை நடத்தி உள்ளோம். 2 ஆண்டுகளில் 11 மாநில தேர்தல்களை நடத்தியுள்ளோம்.

    வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் ஒவ்வொரு நிலையிலும் அரசியல் கட்சியினரிடமும் ஆலோசனை நடத்தினோம்.

    1000 ஆண் வாக்காளர்களுக்கு, 947 பெண் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. 49.7 கோடி ஆண் வாக்களர்கள் உள்ளனர்.

    100 வயதைக் கடந்த 2.18 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

    மக்களவை தேர்தலில் 55 லட்சம் மன்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

    தேர்தல் தொடர்பான விவரங்களை வாக்காளர்கள் செயலி வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.

    2024ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். தங்களின் வேட்பாளர் குறித்து விபரங்களை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் தெரியப்படுத்த வேண்டும்.

    KYC செயலியில் வேட்பாளர் பற்றிய பிரமாண பத்திரங்கள கிடைக்கும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் காஸ்டிங் செய்யப்படும்.

    எல்லைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். புகார் அளிக்க மக்கள் செயலிகளை பயன்படுத்தலாம்.

    தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. சட்டவிரோத ஆன்லைன் பணப் பரிமாற்றம் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

    அண்மையில் நடைபெற்ற பல்வேறு மாநில தேர்தல்களில் 3,400 கோடி பணம் சிக்கியது.

    சூரிய மறைவுக்கு பிறகு வங்கி வாகனங்களில் பண நடமாட்டம் கூடாது. தேர்தலில் வெறுப்பு பிரசாரம் இருக்க கூடாது.

    தனி நபர் வாழ்க்கை குறித்து எந்த விமர்சனமும் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال